Friday 17 February 2017

ஒளிப்படம் எடுப்போர்களின் சொர்கம்- வாகமண் (கேரளா) - Photographer's Paradise Vagamon (Kerala) Episode-4


        வாகமண் தங்கல் பாறை தலத்தை மகிழ்வுற கண்டு விட்டு பாலஸ்'டு பயணத்தை தொடர்ந்தோம். அங்கே ஒரு வாகனம் மட்டுமே சென்று வரக்கூடிய மண் பாதை தென்பட்டது, அவ்வழியே சென்ற பொது கண்களுக்கு விருந்தனாவை தான் கீழ் காணும் புல் நிறைந்த மலை,  வாகமண் புல்வெளிகள் என்று நாம் அழைப்போம்.  (Vagamon Meadows in Google Maps) என்று கூகிள்  மேப் அடையாளப்படுத்துகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவதில்லை. அமைதியான சூழலில் இயற்கையின் எழில் கோலத்தை கண்டு வரலாம். வழி நடுவே காணும் செந்நீர் (தேயிலை) தோட்டங்களின்  அழகு நம் மனதிற்கு இன்பம் அளித்திடும். 
          
             ஒளிப்படம் எடுத்து எங்கள் காட்சி பேழை உறக்க நிலைக்கு சென்று விட்டதால் (புரியலையா கேமரா சார்ஜ் போச்சு ) எங்கள் கைபேசி பட பதிவுகள் இவை.. 














பசித்த போது ஒரு சிறிய கடையில் ஒரு சிற்றுண்டி, கப்பா அவித்து தாளித்தது, கூடவே சூடான கட்டஞ்சாயா. குடித்து விட்டு பயணம் தொடர்ந்தது. 



            வாகமண் புல்வெளி பகுதிகள் வனாந்திரம் போன்ற காட்சிகளாயிருந்தாலும், பல நிலங்கள் வேலி யால் சூழ்ந்துள்ளன. ஒவ்வொரு வேலிக்குள்ளும் பெயர் பலகைகள் அவரோட எஸ்டேட், இவரோட எஸ்டேட் என்று. எப்படி இந்த இடங்களை பட்டா போட்டாங்க னு நினைக்கவே ஒரு கிறக்கம் வந்தது. மலையில் சில இடங்களில் அதிக மரங்கள் இருந்தன. சில புல்வெளி தரைகள் மேய்ச்சலுக்காக இந்த இடங்கள் உள்ளன. என்பது எங்களுக்கு புரிய சில மாதங்கள் எடுத்துக்கொண்டது. உட்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளில்  பசு மாட்டினை காண முடிகிறது, இத்தனை பச்சை புல் இருந்தால் பால் வளம், கால்நடை செல்வங்கள்  அதிகமாவே இருக்கும். இதன் காரணமாகவே இங்குள்ள சாயா அவ்வளவு சுவையாக திகழ்கிறது. 











         தங்கல் பாறை வழியாக முதன்மை சாலை வந்து சேர்கையில் வலப்புற வழியே செல்லும் போது,  15 நிமிட பயணத்தில் வாகமண் பைன் மரக்காடுகளை (Pine  Valley ) சென்றடையலாம். வழியெங்கும் கடைகள், சூடான கப்பை கிழங்கு, அனல் பறக்கும் சோளப்பொறி, ஜிலென்ற ஐஸ் கிரீம் கடைகள் தாண்டி உள்ளே சென்றால், சூரிய ஒளி புகாத இருள் சூழ்ந்த இடமாய் தெரிகிறது பைன் மரக்காடுகள் வளைர்ந்திருக்கும் இடம், வான் தொடும் மரங்கள், உயரம் பார்க்க  முடியுமா?.. என்று நெட்டை மரங்களாய் நிற்கின்றன. செல்பி குச்சிகளோடும், விலையுயர்ந்த கேமராக்களோடும் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். மலையாளத்தில்  வெற்றி (தமிழ்நாட்டிலும் வரவேற்பை) பெற்ற ப்ரேமம் படத்தின் மலரே பாடலின் சில காட்சிகள்  இங்கு தான் படமாக்கப்பட்டது என ஒருவர் நம்மிடம் சொல்ல, இடத்தை நம்மால் மறக்க முடியவில்லை. வாகமண் சென்றால் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு இடமாகும். பொதுவாய் காதலர்கள் அதிகளவில் வந்து தம்மி எடுத்து மகிழ்கின்றனர்.

நாங்கள் சுட்ட சில ஒளிப்படங்கள்.......?!!


























ஒரு நாளைக்குள் இத்தனை இடத்தை  சுற்றி பார்த்தோம், என்ற மன நிறைவோடு வாகமண் சுற்றுலா தலத்திற்கு விடை கொடுத்தோம்...

வாகமண் பகுதி நிறைவுற்றது.

பயணம் தொடரும்........

வாகமண்- பைன் வேலி செல்லும் கூகிள் வரைபடம் 




நேசமுடன் 
இளங்கோ கண்ணன்  

No comments:

Post a Comment