Friday 17 March 2017

தேக்கடி-வண்டிப்பெரியார்-தேயிலை தோட்டங்கள் & கப்பா பிரியாணி- Tea Plantation in Thekkady (Kerala) & Kappa Biriyani

      வரும் கோடை விடுமுறை நாட்களை கேரளாவின் தேக்கடி மற்றும் வாகமண் பகுதியில்  சுற்றலா செல்லலாம்.  நண்பர்களே..இந்த வலைப்பூவில் தேக்கடி பற்றிய பதிவுகள் இடம் பெற்றுள்ளன. 

பெரியாற்று நதி - A View of small River 
     
         வழிகள் எங்கும் பச்சை படர்ந்தும். ஆற்று நீரோசை நிறைந்தும் காணப்படும் ஒரு பகுதியாகும். வழியில் எங்கும் நம்மை வசீகரிப்பவை தேயிலை தோட்டங்களின் பசுமை, அழகு, அங்கே ஒளிப்படங்கள் எடுத்து, தம்மிகளோடு மகிழலாம். கண்ணன் தேவன், AVT  போன்ற பெயர் பெற்ற தேயிலை தோட்டங்கள், மற்றும் உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன, அது மட்டுமின்றி சிறு சிறு தேயிலை ஆலைகளும் உள்ளன. Factory  outlet என்று இருக்கும் கடைகளில் மலிவாக தேயிலை கிடைக்கின்றது, தேயிலை வாசம், ஏலக்காயின் மணத்தோடு இருப்பதால் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது மனம். சில ஆலைகளில் கட்டஞ்சாயா இலவசமாக வழங்கபடுகிறது, ஒரு கோப்பை பருகி விட்டு வீட்டுக்கும், அக்கம் பக்கத்துக்கு உறவினர்களுக்கும் வாங்கி கொண்டு வந்து கொடுத்து மகிழலாமே..!  தேக்கடி செல்லும் போது எல்லா இடங்களை சுற்றி பார்த்தாலும் நிறைய இடங்களை நாம் கண்டு வர இயலாமல் போகும், அதற்க்காக ஒரு திட்டமிட்டு எங்கெல்லாம் செல்வது, நேரத்தை கணக்கிட்டு சென்று வருகையில் எல்லாம் வெற்றியாக நிகழும். மழை  பெய்கின்ற நாட்களில் பார்க்கும் இடமெல்லாம் மிக அழகாக உள்ளது, சுவையான உணவு வகைகளும் கிடைப்பதால்.. சந்தோசத்தோடு சென்று வரலாம். எங்கள் பாலசோடு பயணிக்கயில் எடுத்த ஒளிப்படங்கள் இவை.


தேயிலை தோட்டங்கள் எழில்  - Beauty of Tea Plantation 
Beauty of Tea Plantation
   

A Church near Kuttikanam in Kerala



Beauty of Tea Plantation




மழை பெய்த நேரத்தில் 

A Rainy day
          தேக்கடி கேரள-தமிழக எல்லையாக திகழ்வதால், சாப்பாடு நம்மூர், மற்றும்  கேரளா மாநில சுவையோடு கிடைக்கிறது. காலை நேரத்தில் இட்லி, தோசை, புட்டு கடலை கறி, மதியம் சாதா  சாப்பாடு (4 வகை கூட்டு, பருப்பு, சாம்பார், ரசம், மோர், பப்படம்), மீன் கறி சாப்பாடு (கடல் மீன் மற்றும் அணை மீன் இவற்றில் தயார் செய்த கறிமீன், பொறித்த மீன் )
       இவை தவிர பிரியாணி வகைகள் அதிலும், சேர நாட்டு  தலைசேரி பிரியாணி, கிடைக்கின்றன, இறைச்சி வகைகளில், கோழி, நாட்டுக்கோழி, ஆடு, பீப், போத்து, பன்றி, நாவை எரித்துவிடும் சுவையில் கிடைக்கின்றன. தேக்கடி நகரில் பேருந்து நிலையம் அடுத்துள்ள, குட்டநாடன் ஹோட்டலில் (Kuttanadan Restaurant)  ஓர் நாள் உணவுகளை சாப்பிட்டோம், இங்கு பட்சணங்கள் கைக்கடிக்காத விலையில் கிடைக்கின்றன. மாலையில் வழங்கப்பட்ட சம்பா அரிசி கஞ்சி, நெஞ்சில் மறவாதது, அதனோடு தேங்காய் துவையல், பப்படம், அச்சாறு என்ற ஊறுகாய், இரண்டு பொரியல் கூட்டுகள். அதோடு கேரளாவின் சுவை நிறைந்த கப்பா பிரியாணி (Tapioca or Caasava Biriyani) (இடுக்கி மாவட்ட சிறப்பு) அவித்த மரச்சீனி கிழங்கில், பீப் கறி சேர்த்து,பப்படம் பொடித்து போட்ட, கப்பா பிரியாணி, அள்ளி எடுத்து திங்கயில் நாவில் கரைந்து செல்கிறது, அதனை சுவை, இடை இடையே இறைச்சி துண்டுகளும் சுவை மொட்டுகளை கிளர்ச்சி செய்கின்றன. மிச்சம் வைக்காமல் சாப்பிடலாம். மறக்காமல் சாப்பிட வேண்டிய ஒன்று.  

சுவை நிறைத்த கப்பா பிரியாணி -Tasty Kappa (Tapioca or Caasava ) Biriyani 

ஒரு மழைக்கால காட்சி- a Rainy day 


Rally of Mist


பயணம் தொடரும்...

நேசமுடன்
இளங்கோ கண்ணன்

தேக்கடி சுற்றுலா தலத்தோடு காணவேண்டியவை

1. தேக்கடி படகு குளம் அணை மற்றும் புலிகள் காப்பகம் (Thekkady Boat ride,Dam and Eco Tourism) Thekkadi
2. வண்டிப்பெரியர் தேயிலை தோட்டங்கள் (Vandiperiyar Tea Plantation)
3. பருந்தும்பாரா Parunthumpara
4. கவி அணை மற்றும் சூழல் சுற்றுலா (Gavi Dam and Eco Tourism)
5. வாகமண் Vagamon


No comments:

Post a Comment