Saturday 26 November 2016

கடல் + காயல் = கொல்லம் ( A Trip to Kerala-Kollam- Munroe Island) Part-1

கடவுளின் சொந்தம் நாடு (Gods Own Country) என்று அறியப்படும் கேரளா மாநிலத்தின் கொல்லம் (Kollam or Quilon) நகருக்கு ஒரு பயணம்.

    கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து (65 கி.மீ )சுமார் ஒன்னரை மணிநேர பயணத்தில் நாம் கொல்லம் நகரை அடைந்து விடலாம். வழியெங்கும் நீர் நிறைந்த ஆறுகள் (புழைகள்), காயல் என்று தண்ணீர் கடல் போல் பரந்து, அகன்று, பச்சை பட்டாடை உடுத்த புல்வெளிகள், வானத்தை தொடும் உயரத்தில் தெங்குகள், நம் கண்களுக்கு விருந்து அளிப்பவை. உங்கள் கேமராவுக்கு அதிக ஒளிப்படங்களை தருவதில் கேரளம் முதலிடம் பிடிக்கும் என்பது திண்ணம். 

          கொல்லம் நகரை பற்றி கேரளத்தில் வழங்கும்  பழஞ்சொல் ஒன்றுண்டு     "கொல்லம் போயால் பின்னே இல்லம் வேண்டா"  இது கொல்லம் நகரின் அழகையும், உணவு முறைகளை பொறுத்தே அமைத்திருக்கும் என்பது என் எண்ணம். அழகிய தெருக்கள், காயல், மற்றும் ஆறுகளின் நீரோட்டம் என கொல்லம் மாநகர் அழகின் இருப்பிடமாய் திகழ்கிறது.

     கொல்லம் நதி தீரம் பார்த்து தீராது,  அடுத்து கொல்லம் கடற்கரை, கடற்கரையோரம் சிறுவர், இளையோர், முதியோர் அனைவரை கவரும் வகையில் மகாத்மா காந்தி பூங்கா உள்ளது, இங்கு அமர்ந்திருக்கும்  கடல் கன்னி சிலை (Mermaid Statue) நம்மை வசீகரிக்கின்றது, அலைகள் அதிகமாய் வீசும் ஆழம் மிகுந்த அரபிக்கடல், சுருட்டும் அலைகள், கடல் கண்ட மகிழ்ச்சியில் கடலாடும் ஆசைகள் நம்மை விடாது, பார்த்து ரசிக்க மட்டுமே இக்கடல், கடலில் குளிப்பது ஆபத்தானது, அங்கங்கே எச்சரிக்கை பலகைகள் உள்ளன. அதை மீறியும் ஆசை விடவில்லையானால் கடலில் கால் நனைத்து  இன்பம் கொள்ளுங்கள்,
     
       இந்த கடற்கரையில் உப்பு நீரிலிட்ட நெல்லிக்காய், மாங்காய், அன்னாசி, புளிச்சங்காய்,  (படிக்கும் போதே நாவில் நீர் ஊருதா ..) கிடைக்கிறது, வாங்கி கடித்து கொண்டே, கடல் மணலில் வெறும் காலுடன் நடக்கலாம், உங்கள் விருப்ப பண்டங்கள் அதிகமாய் கிடைக்கிறது, ஆகவே அதை சுவைத்து மகிழுங்கள். 


மகாத்மா காந்தி பூங்கா  கடல் கன்னி சிலை (Mermaid Statue in Kollam Mahatma Gandhi Park )

இரை  தேடும் வெண் கொக்கு

          கடற்கரையின் கிழக்கு பக்கம் நோக்கி பார்க்கையில் ஒரு பெரிய ! (சிறிய) கப்பல், (Dredger Hanista)  நம்மை வா. வா.. வென்று அழைக்கின்றது. நடந்து.. நடந்து.. கடல் அலையோடு பேசிக்கிட்டே ..  போனா ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம், பக்கத்தில் இருப்பது போன்று இருக்கும், நடக்கையில் தூரம் போகும் ( தூரம் நீ இருக்கையில் பக்கமாய் தெரிகிறாய்.. பக்கம் நானும் வருகையில்.. தூரம் நீயும் போகிறாய்..ஏதோ சினிமா பாடலின் வரிகள் ஓடும்), அதனால் முடிவு உங்கள் கையில், எப்படியோ.. கப்பல் அருகில் போனா...!,  ஒரு பிரம்மாண்டம் ( அதை வார்த்தைகளால் எழுத முடியல கண்டிப்பா பார்த்து பாருங்க).. நம் கண்ணருகில் தரை தட்டி காணக்  கிடக்கிறது.. இதை ஏராளமானோர் பார்த்தும், படம் பிடித்தும் செல்கின்றனர்..   

தரை தட்டி நிற்கும் கப்பல் (Dredger Hanista)

கப்பலின் முன்னே 

ஆயிரம் படம் எடுத்தாலும் ஆசைகள் தீராது 

பிரமாண்டமாய் கிடக்கிறதே (Dredger Hanista on Mundakkal Beach in Kollam) 

கண்ணெதிரே ஒரு கப்பல் அழகு தோற்றம்

      கேரளாவில் பொதுவாக சாப்பாடு எல்லா இடத்திலும் சுவை மிகுந்ததாய் இருக்கிறது, சிறிய தட்டு கடை முதல் பெரிய உணவகங்கள் வரை கிடைக்கும் உணவு வகைகளின் ருசி நம் நாவை விட்டு அகலாது, விலை சற்று மாறுபடும். 

     எங்கள் பயணத்தில் கொல்லம் நகரில் ருசிக்கூட்டு (Ruchikootu) என்னும் பெயர் கொண்ட ஹோட்டலில் எம் மத்தியான  உணவை சாப்பிட முடிவெடுத்து சென்றோம், எல்லா  டேபிள்களிலும் மக்கள் அதிகமாய் அமர்ந்து ஒரு "கட்டு கட்டிக்"கொண்டிருந்தனர், காலியான ஒரு இடத்தில இடம் பிடித்து உட்கார்ந்தோம், பிரியாணி சாப்பிட தீர்மானித்தோம், ஒரு கணம் சுற்றி பார்க்கையில்,  கடையில் அனைவரின் தட்டுகளையும்   மீன் கறி ஊண் (சாப்பாடு) ஆக்கிரமிப்பு  செய்திருந்தது, நாங்களும் மீன் கறி ஊணையே ஆர்டர் செய்தோம், நல்ல சூடான சூறை மீன் கறி, அதுவும் கேரளாவில் ப்ரத்யேகமாய் (மீன் குழம்பு, மீன் புளிமுளம் கறிகளில்)  சேர்க்கப்படும் கொடம்புளி* (Garcinia gummi-gutta) இட்ட, செந்நிற, மீன் குழம்பு, (மணம் இன்னும் நாசியிலே  நிற்குதப்பா) கேரளாவின் ஸ்பெஷல்   சி ஓ அரிசி சோறு (பெரிய அரிசி) மற்றும் 5+1 வகை கூட்டுகள், பப்படம் இவையோடு,  மீன்குழம்புக்கு, பருப்புக்கு, சாம்பாருக்கு, ரசத்திற்கு, சம்பாரத்திற்கு (மோர்) என போதும் போதும் என்கிற அளவு சோறு கொடுக்கிறார்கள், குடிப்பதற்கு சூடான வெந்நீர் (கேரளாவின் எல்லா உணவகங்களில் வெந்நீர் மட்டுமே வைக்கப்படுகிறது) வயிறு புடைக்க  சாப்பிட்டு பில்லை பார்த்தால் கை கடிக்காத விலை தான். சோறு-60/- ரூபாய், கறி மீன் ரூபாய்.80/-, அப்போ மறக்காம இங்கேயும் ஒரு விசிட் அடிச்சிருங்க..

மீன் கறி ஊண் (சாப்பாடு)  (a Delicious Kerala Meals with 6 variety Side Dishes)

கொடம்புளி* (Garcinia gummi-gutta) இட்ட, செந்நிற, சூறைமீன் குழம்பு





*ருசிக்கூட்டு (Ruchikootu)  ஹோட்டல், கொல்லம் பீச் ரோடு சாலையிலிருந்து பள்ளிதோட்டம் -திருமுல்லாவரம் பீச் செல்லும் சாலையில் அமைத்துள்ளது, Land Mark- SBI Atm.



கொடம்புளியின் மருத்துவ குணங்கள் மற்றும்  மேலதிக விவரங்களுக்கு கிளிக்குக..
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF             

        அடுத்த இடம் காயலின் ஆதிக்கமாய் திகழும் கொல்லம்- மன்றோ தூரத்து (Munroe Island or Muntrothurthu)  என்னும் தணுத்த பிரதேசம், அஷ்டமுடி காயல், பல கிலோமீட்டர் நீளத்திற்கு பரந்து கிடக்கிறது, காயல் கரை கடக்க படகு சேவை உள்ளது, பெருமண்- பேளும் தூரத்து வழியே எங்கள் பைக் சென்றது, காயல் வழியே படகில் பயணிப்பது நமக்கு "அதி" ரசமானது, டிக்கெட் 13 ரூபாய், இக்கரையிலிருந்து அக்கரை செல்ல, பைக் முதல் கார், லோடு ஆட்டோ, மற்றும் பயணிகளை சுமந்தபடி ஒரு பத்து நிமிட நீர்வழி பயணம், காயல் முழுவதையும்,             கேமராவில் சுட்டுத்தள்ளலாம், காயலின் நடுவே ரெயில்வே பாலம் உள்ளது, அதன் மேல் ட்ரெயின் வந்தால்  உங்கள் ஒளிப்படங்கள் எண்ணிக்கை சற்று அதிகமாகும்.. இதை தவற விடாதீங்க..   

From Prumon to Pezhumthuruthu Ferry


இக்கரையிலிருந்து அக்கரைக்கு 


பெருமண் முதல் பேளும் துருத்து தோணி பயணம் 


 From Perumon to Pelum thurthu


பெருமண் முதல் பேளும் துருத்து தோணி பயணம்


பெருமண் முதல் பேளும் துருத்து தோணி பயணம் பைக் முதல் கார், லோடு ஆட்டோ மற்றும் பயணிகளுடன்.
 

 

 From Perumon to Pelum thurthu Ferry with Travelouge, Car, and Heavy Vehicles
          


போட் அக்கறையிலிருந்து இக்கரை 

மேலும் ருசிகரமான கொல்லம் மன்றோ- தூரத்து நிகழ்வுகள், ஒளிப்படங்கள் அடுத்த பதிவில் இடம் பெறும் ...

நேசமுடன் 
இளங்கோ கண்ணன்.

2 comments: